Category Archives: கும்பமுனி

ஈயார் தேட்டை

This gallery contains 8 photos.

’’நம்ம நாஞ்சிநாடன் பெய வீட்டுக்கு  எதுத்த வீடுதானே பப்படக்காரி பாக்கியத்துக்க வீடு… பத்து பப்படம் வாங்கி குடுத்து விடுண்ணா செய்வான் கேட்டேரா? “ என்றார் கும்பமுனி. ”நீரு சொன்னா செய்ய மாட்டாளா பின்னே? என்ன ஒரு எளவுண்ணா ஒடனே பப்படம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், நாலடியார், காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யப்பிரபந்தம், கம்பராமாயாணம் இங்கெல்லாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

ஆரிய சங்கரன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் …..

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை

This gallery contains 1 photo.

எப்போதுமே,,,நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் ஒரு அங்கதம் இருக்கும்,,, !அது,,சமயத்தில் குத்தாலத்துச் சாரல் மழை போல,,பெய்யும்,,,!ஏன்யா,,,திப்பரப்புன்னு சொல்ல மாட்டியளோ ? என்னு கேட்டிராதிய,,, சில சமயத்துல,,,,இப்ப,,கன்னியாரி மாவட்டத்துல பெய்த,,கோடை மழையாட்டம்,,,அடிச்சுப் பொழிக்கும்,,,அடிச்சிப் பொழிக்கிற ஆட்டத்துல,,,,அங்கதத்துக்கே அங்கதம்,,,,வந்து,,சன்னதம் வந்துரும்,,,,சாமீ கொண்டாடியாட்டு ஆராசனை வந்து ஆடுக ஆட்டத்தைப் பார்த்தா ? என்னய்யா? மனுசன்,,இந்த கிழிகிழிக்கானே ?எவனும்,, எந்த அரசியல் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தற்குத்தறம்

This gallery contains 1 photo.

பேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வல் விருந்து

This gallery contains 1 photo.

வல் விருந்து வாசு பாலாஜி நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை ’ பற்றி நீந்தி ‘சதுரங்க குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன.             புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முனியும் முனியும்

This gallery contains 2 photos.

முனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மைசூரில் கும்பமுனி

This gallery contains 1 photo.

சோழகக்கொண்டல் நன்றி: பதாகை:- https://padhaakai.com/2015/04/27/kumbamuni-at-mysore/ பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முனகல் கண்ணி

This gallery contains 1 photo.

கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

சவம் நினைந்து உரைத்தல்

This gallery contains 10 photos.

சவம் நினைந்து உரைத்தல் நாஞ்சில் நாடன் “சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே! முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா!” குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார் கும்பமுனி. நேரம், மாலை மயங்கிக்கொண்டிருந்தது. காகம், மைனா, கொக்கு, நாரை, செண்பகம், புறா, பருந்து, கிளி, சிட்டுக்குருவி, சாம்பல் குருவி, தேன்சிட்டு யாவும் கூடடையும் மும்முரத்தில் இருந்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அவயான் பொந்து

This gallery contains 7 photos.

அவயான் பொந்து நாஞ்சில் நாடன் “கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருமூலம்

This gallery contains 2 photos.

ஜெயமோகன் “ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கும்பமுனி யார்?

This gallery contains 3 photos.

அன்புள்ள  ஜெ, https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/ நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..! “மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.” சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பைரவ தரிசனம்

This gallery contains 6 photos.

“சரி! கடவுளே ஒம்ம முன்னால் வந்து நிண்ணா என்ன கேப்பேரு நீரு? ஒரு பாரத ரத்னா கேப்பேரா? அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது… ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா? மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு? வேணும்னா கடவுள் கூட ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கும்பமுனியும் தவசிப்பிள்ளையும்

This gallery contains 7 photos.

கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன்  (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தொடர்ச்சி – பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…

This gallery contains 6 photos.

பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…

This gallery contains 8 photos.

“எதையும் மொறயாச் செய்யணும் வே!  நமக்கு எதுக்கு அரசாங்கத்து பொல்லாப்பு?  ஏற்கெனவே நம்ம யோக்யதை கேள்விக்கு உள்ளாயாச்சு. நாளைக்கு எவனும் அறச்சீற்றம் கொண்டு முகநூல்ல எழுதுவான்… கனிமப் பொருள் களவாண்ட கும்பமுனி என்று… அதுக்கும் ஆயிரம் பேரு சொந்த பேரை ஒளிச்சு வச்சுக்கிட்டு லைக் போடுவான்…” தொடரும்….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை

This gallery contains 13 photos.

”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு!

This gallery contains 6 photos.

கும்பமுனி வலுவான காயங்கள் பெற்றவர். சமூகத்திடம் எதைப் பெற்றாரோ அதைத் திருப்பி செலுத்துவார், பைசா பாக்கி இல்லாமல், வட்டி இல்லாக் கடனாக. நகுதற் பொருட்டன்று, மேற்சென்று இடித்தற் பொருட்டு. ……………..(நாஞ்சில்நாடன்) கும்பமுனி கதைகளை இணையத்தில் படிக்க:  https://nanjilnadan.com/category/கும்பமுனி/

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்

This gallery contains 14 photos.

’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை. ‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’ இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்… யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும்? கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்