தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று வழிநெடுக நினைவுகளை நட்டுக்கொண்டு போய் ஒரு தோல்பையில் முடிகிறது கதை.. http://skaamaraj.blogspot.com/2011/10/
நல்ல பதிவு.
தொடர்ந்து படிப்பேன்.
நன்றி.